search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு கொள்ளை"

    • கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வண்டலூர்:

    ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் கிராமம், கவின் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி புவனேஸ்வரியுடன் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார். மேல் தளத்தில் அவர்களது ஒரு மகன் குடும்பத்துடன் உள்ளார்.

    இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், பூஜை பொருட்கள், இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.

    வீட்டின் மேல் தளத்தில் உள்ள சீனிவாசனின் மகன் தங்கி இருந்த அறைக்கு கொள்ளையர்கள் செல்லாததால் அங்கிருந்த 30 பவுன் நகை தப்பியது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து மறைமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் அடுத்த பொத்தேரி குமரன் முதல் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். பொத்தேரி அண்ணா தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    காலையில் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து மறைமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
    • பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    செங்கல்பட்டு:

    வந்தவாசியை அடுத்த கீழ்னாமம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (33). இவர் உறவினர் செல்வத்துடன் வண்டலூர் பூங்காவை சுற்றி பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    செங்கல்பட்டு அடுத்த பழவேளி அருகே உள்ள திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம வாலிபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பால் செல்வக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    இதில் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது சென்னை, மந்தைவெளி, மயிலாப்பூரை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என்பது தெரிந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    • கடந்த 24-ந்தேதி சந்திரா வீட்டை பூட்டிவிட்டு விருதாச்சலத்தில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
    • அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர், ஏ.வி.எம்.நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சந்திரா. இவர் பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளராக உள்ளார். விஜயகுமார் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    கடந்த 24-ந்தேதி சந்திரா வீட்டை பூட்டிவிட்டு விருதாச்சலத்தில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதுகுறித்து சந்திரா மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

    ×